சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தய பாரத் ரயில் திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகருக்கு பத்து நிமிடம் முன்னதாக செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் எட்டு மணி நேரத்திற்குள் செல்லும் வகையில் இயக்கப்பட்டு வரும் நிலையில் திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு பத்து நிமிடங்கள் முன்னதாக செல்லும் வகையில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கல்லுக்கு இரவு 7.56 மணிக்கு பதில் இரவு 7.46 மணிக்கு, மதுரைக்கு இரவு 8.30 மணிக்கு மற்றும் விருதுநகருக்கு 9.03 மணிக்கும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.