தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை திறமையாகச் செயல்பட்டு, கையும் மெய்யுமாக அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத்துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரியின் கைது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய பாஜக அரசு நடத்திவரும் மிரட்டல் அரசியலுக்கு கடும் கண்டனம் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.