சாலையில் மழை நீர் தேங்கியது தொடர்பாக ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலை உள்ளது என அண்ணாமலை அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையா, இந்த இன்ஸ்டால்மெண்ட்ல நடைபயணம் போறாரே அவரா? திமுக அரசை விமர்சிப்பது வேறு. ஆனால் அதிமுக ஆட்சியை குறை சொல்லும் அண்ணாமலை கண்ணில் தான் கோளாறு இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.