கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து இன்று சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மற்றும் எழும்பூருக்கு இரவு 8.30 மணிக்கு, கோவை மற்றும் சென்ட்ரலுக்கு இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மறு மார்க்கமாக பிப்ரவரி 5ஆம் தேதி நாளை எழும்பூர் மற்றும் குமரிக்கு மதியம் ஒரு மணிக்கு, சென்ட்ரல் மற்றும் கோவைக்கு காலை 10.20 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.