மக்களுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க, ரேஷன் கடைகள் மூலமாக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இத்திட்டம் சோதனை முயற்சியாக நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் இத்திட்டத்திற்காக நடப்பு சீசனில் 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்படவுள்ளது.