மக்களுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க ரேஷன் கடைகள் மூலமாக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் சோதனை முயற்சியாக நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் இந்த திட்டத்திற்காக நடப்பு சீசனில் 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட உள்ளது.