கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புன்னவிளை பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தங்கசாமியின் மனைவி உயிரிழந்தார். இதனால் தங்கசாமி தனது மகன் மணிகண்ட பிரபுவுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்ட பிரபு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த தங்கசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.