மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே கழிவுநீர் தொட்டி இருக்கிறது. இந்நிலையில் பசுமாடு அந்த வழியாக சென்றபோது கழிவுநீர் தொட்டி உடைந்து உள்ளே விழுந்து சத்தம் போட்டது. மாட்டின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.