தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. முன்னதாக 60 ஆயிரம் பாட்டில்கள் வரை ஒரு நாளைக்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு லட்சம் பாட்டில்கள் வரை பீர் விற்பனையாகிறது. இந்நிலையில் தற்போது ட்ராபிகல் நிறுவனத்திடம் இருந்து காட்பாதர் மற்றும் தண்டர்போல்ட் ஆகிய பீர் வகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த பீர் 170 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக கோதுமை பீரை இறக்குமதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி காப்பர் போல்டு என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து கோதுமை பீரை இறக்குமதி செய்ய உள்ளனர். மேலும் இந்த பீர் 190 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.