புதுச்சேரியைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமச்சந்திரன் மற்றும் ஹேமராஜன் என்ற இரட்டை மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஹேமச்சந்திரன் பிஎஸ்சி, ஐடி முடித்துவிட்டு டிசைனிங் பணி செய்துள்ளார். இவர் தன்னுடைய உடல் பருமனை குறைப்பதற்காக சென்னை பம்மலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பை நீக்க முடிவு செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார். அவர் கார்டியாக் அரெஸ்ட் மூலமாக இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது ஹேமச்சந்திரனின் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி சங்கர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் அவருடைய குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் உண்மை தன்மையை கண்டறிய விசாரணைக் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.