தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடுகின்றனர். ஆனால் மது பிரியர்கள் கூலான பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், சாதாரண நாட்களில் ஒரு லட்சம் பெட்டிக்கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும். ஆனால் தற்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் பெட்டி பீர் விற்பனையாகி வருகிறது. மே மாதம் முதல் பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.