கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதனால் மற்ற மாவட்டங்களிலும் அதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.