இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணைக்க உள்ளதாக மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், தற்போது மீண்டும் தாய் கழகத்தில் தனது தொண்டர்களுடன் இணைய உள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ள அவர் மக்களை பிளவுபடுத்தும் பிரதமர் மோடியை கைது செய்து திகார் சிறையில் அடைத்த பிறகு தான் மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.