குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பச்சாவ் நகரிலிருந்து 21 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது, நிலநடுக்கம் காரணமாக கட்ச் மாவட்டத்தில் உள்ள கடோல், பச்சாவ், நேர் பந்தி மற்றும் பிற பகுதிகளில் மக்கள் பீதியடைந்தனர்.

பலர் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வீதியில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.