கட்சி வேலைக்காக வந்துவிட்டு ஆம்பூர் அருகே உள்ள குளிதிகை பகுதியில் உள்ள ராஜஸ்தானி தாபாவில் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் லோகேஷ் உணவருந்த சென்றுள்ளார். அப்போது சாப்பிட அமரும்போது ‘ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்’ என சத்தமாக கோஷமிட்டுவிட்டு சாப்பிட அமர்ந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த இளைஞர்கள் ஏன் இவ்வளவு சத்தமாக கோஷமிடுகிறீர்கள் ஒன்று மெதுவாக சொல்லுங்கள் இல்லை மனதிற்குள் சொல்லுங்கள் என கூறியுள்ளனர். ஆனால் முடியாது என லோகேஷ் மறுக்கவே அவரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் லொகேஷஜே அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.