தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் அனைத்து வீடுகளிலும் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு கண்ணன் மற்றும் ராதையை போல வேடமிட்டு வணங்கினர். அதன்படி நடிகை நயன்தாராவும் தன்னுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடம் அணிந்து வழிபட்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.