மலையாள நடிகை அபர்ணா நாயர் (31 வயது) ஆக.31ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அபர்ணா கணவர் சஞ்சித்க்கும், அபர்ணா தங்கைக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இந்த உறவு அபர்ணாவுக்கு தெரியவந்ததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், இந்த புகாரின் அடிப்படையில் சஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சித் கொடுமைப்படுத்தியதன் காரணமாகத்தான் அபர்ணா, தற்கொலை செய்து கொண்டார் என்று அபர்ணாவின் தாயார் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.