தமிழ் சினிமாவின் செல்லமே என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் விஷால். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் பெரும்பாலும் ஆக்சன் திரைப்படங்களில் தான் நடித்து வந்தார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சரத்குமார் சம்மதிக்காத காரணத்தினால் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று அதுவும் நடக்காமல் போனது. இதனால் திருமண ராசி இல்லை என்று எண்ணிய விஷால் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஷால் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் இருந் போதும் அவர் முன்னதாக அனுஷ செட்டி  என்பவரோடு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் அவர்களுடைய திருமணம் நடக்கவில்லை நின்றுவிட்டது. இதற்கு காரணம் விஷாலுடன் இணைந்து நடித்த லட்சுமி மேனன் உடன் நிறைய காதல் கிசுகிசுக்கள் எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், விஷால் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் தகவல் கேட்டு அனுஷா செட்டிக்கு போனில் பேசியிருந்ததாகவும் நடந்த விஷயத்தை எல்லாம் மறைக்காமல் சொன்னதாகவும் தான் அனுஷா செட்டி திருமணத்தை நிறுத்தியதாக கூறி இருக்கிறார். மேலும் நடிகை லட்சுமிமேனன் தான் விஷாலின் திருமணம் நின்று போனதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.