தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ள நிலையில் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்டிய பிறகு அதன் பிறகு இவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் மற்றும் தன்னுடைய திருமணம் குறித்த கேள்விகளுக்கு முதல் முறையாக அனுஷ்கா பதில் அளித்துள்ளார். நடிகர் பிரபாஸுடன் மீண்டும் ஒன்றாக இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பொருத்தமான கதைகளை உருவாக்கினால் நாங்கள் மீண்டும் இணையலாம் என்று கூறினார். திருமணம் பற்றி கேட்டதற்கு அது இயல்பாகவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அனுஷ்காவும் பிரபாஸும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அனுஷ்கா இவ்வாறு பதில் அளித்துள்ளார்.