அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வரலட்சுமி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்தனர்.

அப்போது கடையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.