திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கேசவனேரி கிராமத்தில் சின்னராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மதியம் கார்த்திகாவும், சின்னராசின் அண்ணன் மகள் சாய் தன்யாவும் மொபட்டில் வள்ளியூரில் இருந்து கேசவனேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வள்ளியூர் நான்கு வழி சாலையை கடக்க முயன்ற போது கோவை நோக்கி அமீர் என்பவர் ஓட்டி வந்த கார் மொபட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த தன்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.