அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது பாலமுருகனின் தாய் வாசுகி, சிதம்பரத்தின் மனைவி ராஜகுமாரி ஆகியோர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.