தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளை வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் 3 மணி வரை வெயில் கொளுத்தி எடுக்கும் என்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர் வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது. மேலும் மோர், ஜூஸ் மற்றும் இளநீர் போன்ற குளிர்பானங்களை அதிகமாக அருந்தவும்.