அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கக் கூடிய தனியார் பேருந்துகளுக்கு அபராத விதித்தால் மட்டுமே தீர்வு ஏற்படாது. பேருந்து உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதரைத் தொடர்ந்து வாதிட்ட அரசு தரப்பு அபராதத்தை 50,000 ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளது என பதில் அளித்துள்ளது.