தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளது. CSK – LSG அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் காலையில் ஓட்டு போடுங்க மாலையில் விசில் போடுங்க என எழுதிய பேனர்கள் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.