தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் கடலூர், திருச்சி ஸ்ரீரங்கம், நெல்லை, சென்னை, திண்டுக்கல், கோவை, விழுப்புரம், திருப்பூர், குமரி என பல்வேறு இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. வி வி பேட் இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இயந்திர கோளாறு சரி செய்யும் பணியிலும் மாற்று வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.