டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநில அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் 50 சதவீதம் ஊழியர்களுடனும் இதர பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தவிர மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தும் பணியாற்ற பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது