பெற்ற தாயின் அன்பிற்கு ஈடேதும் இல்லை என்றும், தன் குழந்தைகளுக்காக உலகையே எதிர்க்கத் துணியும் சக்தி தாய்க்கு உண்டு என்றும் நாம் போற்றுவது வழக்கம். ஆனால், ஒரு தாயே தன் குழந்தைக்குக் கொடூரமான முறையில் சித்திரவதை கொடுத்தால் என்ன சொல்வது? அப்படி ஒரு நெஞ்சை உலுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வைரல் வீடியோவில், பெற்ற தாய் என்று கூறப்படும் பெண் ஒருவர், இரக்கமே இல்லாமல் தன் குழந்தையின் ஆடைகளைக் களைந்து, மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்துகிறார். அந்தப் பிஞ்சு குழந்தை வலியால் துடிதுடித்து, அழுது, தன்னை மன்னித்து விடும்படி கெஞ்சினாலும், அந்தப் பெண்ணின் கொடூரத் தாக்குதல் நின்றபாடில்லை. இந்த ஒட்டுமொத்த கொடூரமும் கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது பார்ப்பவர்களைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தக் கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இணையவாசிகள் தங்களது கடுமையான கண்டனங்களையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். “ஒரு குழந்தையை ஆண் ஒருவர் இப்படித் தாக்கினால் அது பெரிய வன்முறையாகப் பார்க்கப்படுகிறது, ஆனால் ஒரு பெண் செய்யும்போது அதை ‘தாயின் கண்டிப்பு’ என்று கடந்து போக முடியாது; இது தாயின் வடிவத்தில் இருக்கும் ஒரு அரக்கத்தனம்” என்று பலரும் கொந்தளித்துள்ளனர்.

எக்ஸ் (X) தளத்தில் ‘ShoneeKapoor’ என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, சில மாதங்களாகவே பல்வேறு தளங்களில் பரவி 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற துல்லியமான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், குழந்தையைத் சித்திரவதை செய்த அந்தப் பெண்ணை உடனடியாகக் கைது செய்து மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.