சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை 8:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்கிழக்கு மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

இதனால் புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.‏