ஏழைகளின் கடவுள் என போற்றப்பட்ட பட்டுக்கோட்டை மருத்துவர் பாஸ்கரன் காலமானார். அரசு மருத்துவராகியும் சொந்த கிளினிக்கில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு ரூபாய் கூட பணம் வாங்கியது கிடையாது. அது மட்டுமல்லாமல் பணம் இல்லாதோருக்கு மருந்து மற்றும் மாத்திரை தந்து பேருந்து கட்டணமும் வழங்கி உதவியுள்ளார். இவ்வாறு மக்களால் ஏழைகளின் கடவுள் என்று போற்றப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவை தொடர்ந்து கடை அடைந்து அப்பகுதி மக்கள் மௌன ஊர்வலம் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.