தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமனம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், தேனி, கோவை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக இருந்த கே.பி. கார்த்திகேயன் நெல்லை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக டி.ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக இருந்த வி.பி ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக  நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் ஆட்சியராக பழனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கன்னியாகுமரி ஆட்சியராக பி.என். ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஆட்சியராக கே. கற்பகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி ஆட்சியராக ஆர்.வி. ஷஜிவனா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்தி குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் ஆட்சியராக சாரு ஸ்ரீ நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக மகாபாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக மேகநாத ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக கே.வி முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த குமரகுருபரன் தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராக மாற்றப்பட்டார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக செயல் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

#தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லட்சுமி பிரியா ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். சேலம் டேன்மேக் நிறுவனத்தின் எம்.டி கதிரவன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் பள்ளிக்கல்வித்துறையின் சிறப்பு செயலாளராக எஸ். ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர் செயலர் ராஜசேகர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் சிறப்பு செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மருத்துவ சேவைகள் கழக நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி ஆணையராக பி. ரத்தினசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக டி. சினேகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக சி. தினேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.