தமிழ், மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்த தஷி (எ) சிவக்குமார் கார் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தமிழில் ஒத்தவீடு,ஆடவர் போன்ற பல படங்களும், மலையாளத்தில் 60க்கும் அதிகமான படங்களுக்கும் இசையமைத்துள்ளார். கேரள மாநில அரசின் விருது பெற்ற தஷி, நேற்று சென்னை வரும் வழியில் திருப்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.