மலப்புரம் மாவட்டத்தில், சாலையைக் கடக்க முயன்ற தந்தை மற்றும் அவரது இளம் மகனுக்கு ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை உயிரிழந்தார். சிசிடிவி காட்சியில் பதிவான இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தகவலின்படி, சம்பவம் சாலையோரத்தில் தந்தை ஒருவர் தனது காரை நிறுத்தி, தனது  மகனுடன் சாலையை கடக்க முயன்ற போது நிகழ்ந்தது. போக்குவரத்து ஒழுக்கம் இல்லாத, பரபரப்பான அந்த சாலையில், வேகமாக வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகளில், தந்தை தனது மகனின் கையை பிடித்தபடி சாலையை கடந்தபோது, மற்ற வாகனங்களை கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக ஒரு பைக் வேகமாக வந்து நேரடியாக மோதியது. மோதும் அதிர்ச்சிக்கு சில நொடிகள் முன்பே, தந்தை தனது மகனை பாதுகாப்பாக விலக்கச் செய்கிறார் என்பது காட்சியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

 

இந்த சம்பவத்தில் தந்தை பாரிய காயங்களுடன் விழுந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் அவருக்கு உதவினர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். அவரது மகனும் பைக்கையும் ஓட்டிய நபரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறதுடன், வேகமாகவும், கட்டுப்பாடின்றி வாகனம் ஓட்டியதற்கான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்விபத்தில் உயிரிழந்த நபரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை.