சுகாதாரப் பணியாளர்களுக்கான அரசாங்க ஆள்சேர்ப்பு தேர்வு பஞ்சாப் மாநிலம் ஃபிரீத்கோட் மாவட்டத்தில் இருக்கும் பாபா ஃபிரீத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் ஆங்ரேஸ்சிங் என்ற இளைஞர் தனது காதலியின் தேர்வை எழுதுவதற்காக பொட்டு வைத்து லிப்ஸ்டிக் போட்டு பெண் போன்றே வந்துள்ளார்.

ஆனால் அவர் பயோமெட்ரிக் பரிசோதனையின் போது ஆள்மாறாட்டம் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது காதலி பரம்ஜித் கவுர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதோடு இளைஞரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.