தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராய விவகாரத்தில் பலரும் உயிரிழந்த நிலையில் அரசு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விவகாரத்தில் அடுத்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் சாராய வேட்டை தீவிர படுத்தப்பட்டது.

எஸ் பி கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கதவறிய சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட ஐந்து போலீசாரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை எஸ்பி உத்தரவிட்டார்.