கோவில்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கூறினால் காவல்துறை 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக காவல்துறை 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால் அவர்கள் அனுமதி கொடுத்ததாகவே கருதப்படும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக 7 நாட்களுக்குள் முடிவு எடுப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட எஸ்பிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் ‌