தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும் – காரும் மோதி மிகப் பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே துடி துடிக்க பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். ஒப்பனையால் துரத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஐந்து பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.