சென்னையில் மத்திய அரசு அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சென்னையில் முக்கிய அடையாளமாக இருக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.