திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி என்ற பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக முத்துப்பேச்சி (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால் முத்துப்பேச்சி தன்னுடைய குழந்தைகளுடன் கணவரை பிரிந்த தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு உறவினர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை முத்துப்பேச்சியின் தந்தை மாரியப்பன் கண்டித்து வந்துள்ளார். ஆனால் முத்துப்பேச்சி கள்ளக்காதலை கைவிடவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாரியப்பன் தன்னுடைய மகளை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அவர் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தை கடந்த பிறகு ஒரு காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மகள் என்றும் பாராமல் விரட்டி விரட்டி தலையை துண்டாக வெட்டி அவரை படுகொலை செய்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் மாரியப்பனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.