புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரல் இசை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி, நாதஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க எழுத படிக்க தெரிந்திருக்கவும் வேண்டும். இதற்கு 12 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் எனவும் பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பயிற்சி கட்டணமாக 350 ரூபாய் செலுத்த வேண்டும். அரசு சான்றிதழ் படிப்பான இந்த பயிற்சியில் அரசு துறையில் வேலை வாய்ப்புகளும் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நிகழ்ச்சி வழங்க வாய்ப்புகளும், இலவச பேருந்து சலுகை, தங்கும் வசதி மற்றும் கல்வி உதவித்தொகை என அனைத்தும் வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கு மிதிவண்டியும் ஊக்கத்தொகையாக மாதம் தோறும் 400 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் மாவட்ட இசை பள்ளி புல எண்.29/70 லட்சுமி நகர், நரிமேடு, சமத்துவபுரம் வழி, புதுக்கோட்டை 622005 என்ற முகவரியில் தலைமையாசிரியரை நேரில் அணுகவும். மேலும் விபரங்களுக்கு 04322-225575, 9486152007 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.