தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திட்டம் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியது.

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்த விதமான புகார்களுக்கும் இடமின்றி சிறப்பாக செயல்படுத்துமாறும், ரேஷன் கடை ஊழியர்களை தவிர வேறு நபர்களை இப்பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் கூட்டுறவுத்துறை பதிவாளர் அவர்கள் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.