தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடமலை பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுமதி என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.பார்ம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அறிவுமதி கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முருகனின் வளர்ப்பு நாய் குரைத்து கொண்டு அவரை துரத்தியது. இதுகுறித்து அறிவுமதியும் அவரது தாய் கோவிந்தம்மாளும் முருகனிடம் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதால் முருகனும் அவரது மகன் மனோஜும் இணைந்து அறிவுமதி, கோவிந்தம்மாள் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முருகன், மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.