நாடு முழுவதும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக பெண்களுக்கு போட வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் சிறு குறு அளவிலான ரத்த பரிசோதனை மையங்கள் இயங்கி வரும் நிலையில் முறைப்படி பதிவு செய்து மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழை பெற்றுள்ளன. இந்த ஆய்வகங்களில் தரமற்ற முறையில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் பரவி வரும் நிலையில் அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை எட்டு நிமிடத்திற்கு ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்து வருவதால் இந்த புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கும் வைரஸ்களுக்கு எதிராக எச்பி வி தடுப்பூசியை வழங்குவதன் மூலம் வைரஸ்களால் ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பூசி போட்டு அந்த புற்றுநோயை கட்டுப்படுத்தி வரும் நிலையில் ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது ஊக்கப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக தடுப்பூசியை போட மத்திய அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.