11 வயது சிறுமியை பக்கத்து வீட்டு பெண் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். சிறுமி துளசி மற்றும் மனிஷ் என்பவரின் மனைவி ரூபி ஆகியோரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த ரூபி துளசியின் கழுத்தை நெறித்துள்ளார். அதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ரூபியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.