உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஏழை மணமகள்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் பணம், 65 ஆயிரம் ரூபாய் மதிப்பு சீர்வரிசைகள் தரப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி பாலியா மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ முன்னிலையில் 568 ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமணத்தில் 200 ஜோடிகள் கோடி என கண்டறியப்பட்டது. தற்போது போலியாக மணப்பெண் மற்றும் மணமகனாக நடிக்க 500 ரூபாய் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.