கர்நாடகாவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த 18 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ மாணவன் ஆன இவர் உள்ளூரில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென அந்த இளைஞர் மயங்கி கீழே விழுந்தார். அதனைக் கண்டு பதறிய சக நண்பர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டறிந்த மருத்துவர்கள் இரண்டு நாள் தொடர் சிகிச்சை அளித்தும் கோமா நிலைக்குச் சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்