தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்து நான்காம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி மோனிஷா மற்றும் அவரது அண்ணன் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனே இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவி மோனிஷா (9) மட்டும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். தற்போது அவரது அண்ணனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.