தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ,திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.