தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டுதான் பங்கேற்பது வழக்கம். அவர் தமிழகத்தில் கோட்-சூட் போடுவதே கிடையாது. ஆனால் நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகம் மையத்தில் நடைபெற்ற முதலீட்டார்கள் மாநாட்டில் கோட் சூட் அணிந்து பங்கேற்றார். இது குறித்த அவர் மாநாட்டில் பேசுகையில், வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் நான் கோட் சூட் அணிவது வழக்கம்.

ஆனால் இங்கே எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்ட காரணத்தால் இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. இன்று காலையிலிருந்து சென்னையில் மழை பெய்கிறது. நான் இங்கே வந்தவுடன் முதலீடு மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது என்று பேசி இருக்கிறார்.