கொரியாவில் நடைபெற இருந்த BTS இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் கிளம்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை அடுத்த காட்பாடி ரயில் நிலையத்தில் நின்றிருந்த அந்த 3 மாணவிகளிடம் விசாரித்தபோது முதலில் விசாகப்பட்டினத்தை அடைந்து பின்னர் கடல் மார்க்கமாக கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதில் ஹைலைட்டாக வெறும் ரூ.14 ஆயிரத்தை வைத்துக்கொண்டு மூவரும் கிளம்பியுள்ளன. சென்னையை அடைந்த அவர்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கரூர் திரும்பும்போது காட்பாடி ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தபோது இந்த தகவல் தெரியவந்துள்ளது.